Tuesday, 6 July 2021

தவறு யாரிடம் ?

*மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது !!!!*

*தன்னுடைய கணவனுக்கு காது கேட்கவில்லையோ என்று?.*

*ஆனால்... இதை கணவனிடம் நேரடியாக கேட்க அவருக்கு தயக்கம்.*

*இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....*

*டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...*

*"இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,...*

கணவரின் காதில் விழவில்லை எனில்....
*சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்.*
 
*பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள்.*

*எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது.*

அதைக் கேட்டவுடன் மனைவிக்கு ஒரே *குஷி.*

*அடுத்த நாள் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...*

*இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியாச்சானு கேட்டாள். பதில் எதுவும் இல்லை...*

*பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை,*

*ஹாலில் இருந்து கேட்டாள், சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்...*

*கணவரிடமிருந்து பதிலே இல்லை.*

போச்சு *இரண்டு ஸ்பீக்கரும் அவுட்* ஆகிவிட்டதுபோல என்று மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.

*கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக....*

*"இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியாச்சானு?"* கேட்டாள்.

*காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே... அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து,*

*”ஏன்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து,ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் கட்டியாச்சு கட்டியாச்சுனு சொல்லிக்கிட்டே இருக்கேன்,*

அது உன் காதில் விழவில்லையா?
*காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...?* என பொரிந்துத் தள்ளிவிட்டான்...

*மனைவி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.*

*தவறு தன்னிடம் தானா?*


*கதையின் நீதி*

*இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு...*

*அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…*

*என்ன விசித்திரம்!!!*

*இந்தப் பதிவு சிரிக்க 😁மட்டும் அல்ல, சிந்திக்கவும் கூடத்தான்🤔*
 
🌷🌷🙏🙏🙏🌷🌷

Thursday, 6 August 2020

life: இவ்வளவு தான் வாழ்க்கையா

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம்*்.  

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

 💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.  

"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."

💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம்*்.

"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."

💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*, 

"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."

💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*  

"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."

இவ்வளவு  தானா வாழ்க்கை❓

ஆம்   அதிலென்ன  சந்தேகம். 

ஆனானப்பட்டவர்களின்  ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே  நடுங்க  வைத்த  *ஹிட்லர்*  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான்.

அவனோடு  கூட்டு சேர்ந்து  சர்வாதிகார ஆட்டம்  போட்ட   *முசோலினி*   இறந்த போது  ரஷ்ய  தலை நகரில்  முசோலினியின் பிணத்தை  தலைகீழாக தொங்க  விட்டு   ஒரு வாரம்  வரை  அத்தனை பொதுமக்களும்   தங்களது  செருப்பால் அந்தப் பிணத்தை அடித்து  தங்கள் மனக்குமுறலை  தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.

நாம்  *எதை*  ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓ 

நமது  *பதவியா?* 
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது  *படிப்பா?*
நமது  *வீடா?*
நம்  முன்னோர்களின் *ஆஸ்தியா?*  
நமது  *அறிவா?*   
நமது  *பிள்ளைகளா?* 
எது  நம்மைக் காப்பாற்றப் போகிறது?
 
*ரத்தம்  சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின்   எதுவுமே  நம்மை காப்பாற்றப் போவதில்லை*.

*பசித்தவனுக்கு  உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு  உடை கொடுத்து,  எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும்  சமூகத்தில் வாழும்  நாம்   எச்சரிக்கையோடு  நம்மை  காத்துக்கொள்ள  வேண்டும்.

*ஒரே முறை வாழப்போகிறோம* , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம். 

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை  செய்வோம்   நன்மைகளை  ஆயிர மடங்காக...

Monday, 27 July 2020

old is gold: 1955-1988 born generation golden memories of TamilNadu human being

*1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*

​💯% தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்​

​💯% எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.​

​💯% கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.​

​💯% புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.​

​💯% சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.​

​💯% பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை.​

​💯% நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.​

​💯% தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.​

​💯% ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.​

​💯% அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.​

​💯% காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.​

​💯% சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.​

​💯% உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.​

​💯% எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்​

​💯% எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல​

​💯% அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.​

​💯% உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை​

​💯% எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.​

​💯% எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்​

​💯% வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.​

​💯% எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.​

​💯% உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை​

​💯% இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் . . . *அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.*


Thursday, 30 January 2020

How to stay motivated ?

In the jungle which animal is the : 
Biggest ....  Elephant ?
Tallest ....... Giraffe.? 
Wisest ......  Fox ?
Fastest ...... Cheetahs ? 

Yet, the Lion is the KING of the jungle even without ANY of these qualities.!!

Why??

Because...

The Lion is courageous, bold, walks with confidence, dares anything and is never afraid. 

The Lion believes he is unstoppable. 

The Lion is a risk taker. 

The Lion believes any animal is food for him. 

The Lion believes any opportunity is worth giving a try and never lets it slip from his hands. 

So...

- What is it that we get to learn from the Lion ??

• You don't need to be the fastest.
• You don't need to be the wisest.
• You don't need to be the smartest.
• You don't need to be the most brilliant.
• All you need is courage
• All you need is the will to try
• All you need is the faith to believe it is possible.
• All you need is to believe in yourself, that you can do it.!! 

It's TIME to bring out the  Lion in you..!!
*-Swami Vivekanand*

Tuesday, 24 September 2019

Gold: ஏமாற்றி பிழைப்பவரை ஏமாந்து வாழவைத்துக்கொண்டிருக்கும் ஏமாளிகளுக்கு சமர்பணம்

*ஏமாற்றி பிழைப்பவரை ஏமாந்து வாழவைத்துக்கொண்டிருக்கும்  ஏமாளிகளுக்கு சமர்பணம்*

ஆண்டுக்கு ஒரு கடை எப்படி?
தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்றும் கூறுகின்றது. உண்மை என்ன ?*
_____________________

💫 ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் தான் நகை செய்ய முடியும்...!

💫 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 கிராம் தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் தங்க நகை செய்யப்படுகின்றது...!

💫 ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

💫 இதில் நான் சொல்வது என்ன 6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பையும் சேர்த்து விட்டுத் தான் தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!

💫 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

💫 ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

💫 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!
1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம்  செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-

1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--

சேதாரம் 1.5 கிராம் = 4383/-

1 பவுனுக்கு மொத்த லாபம்  4376+4383=8759                

💫 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!

💫 நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும்.
எதுவும் மக்களால் முடியும்...!
இது ஏமாறுபவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்

ஏழைகள்
நடுத்தர வர்க்கத்தார்கள்
நல்லா இருந்துவிட்டுப் போகட்டுமே
உதவி செய்வோம்
ஷோர் செய்வோம் நன்றி🙏

Tuesday, 26 March 2019

Life: pencil thavarukaga rubber karaivathu

*இரப்பரைப் பார்த்து பென்சில் சொல்கிறது, " ஒவ்வொரு முறை நான் செய்யும் தவறுக்கும், என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய், ஆனால் என்னை சுத்தம் செய்யும் போது நீ கரைந்துக் கொண்டே போகிறாயே,  அது எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று.*

*இரப்பர் அதற்கு " அது என் கடமை, நான் படைக்கப் பட்டதே அதற்குத் தான். என்னைக் கண்டு நீ வருந்த வேண்டாம். இதில் எனக்கு முழு மகிழ்ச்சி. என்னால் உன் தவறுகள் அழிக்கப்பட்டு,  நீ திருத்தங்களுடன் முன்னேறி சென்றால் அதுவே என் வெற்றி.  நான் கரைவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை" என்றது.*

*அந்த இரப்பர் வேறு யாருமில்லை.நம் பெற்றோர் தான். அவர்கள் ஆயுள் முடியும் வரை நம் தவறுகளை திருத்திக் கொண்டே இருப்பார்கள்....*                                .                                

*நம் மீது பொறாமை படாத இரு உள்ளங்கள் நம் பெற்றோர்கள்*🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻   

Saturday, 23 February 2019

Health: own health checkup, master health checkup is fraud

மாஸ்டர் ஹெல்த் செக்கப்பின் திடுக்கிடும் இரகசியம்

நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கின்றாரா?
இல்லையா?

எப்படி தெரிந்து கொள்வது?

*"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!*

பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,

"நீ நோயாளிதான்" என நம்ப வைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது,
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்
(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
*சர்க்கரை நோய் ரீடிங் 80/140,*
*இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,*
*சிறுநீரக நோய் ரீடிங் 1.02,*
*கொழுப்பு அளவு,*
*உப்பு அளவு*
*பொதுவாக இப்படி தான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன ஆங்கில மருத்துவம்.*

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்.

*இத்தகைய "ரீடிங்குகள்" நவீன விஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".*

*Our Body mechanism is beyond சயின்ஸ்.*

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது.
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது*
*யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது*

உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்,
*வெவ்வேறு தட்ப வெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவு பழக்கம்*,
*வெவ்வேறு உணவு உண்ணும் முறை*,
*வெவ்வேறு கலாச்சாரம்*,
*வெவ்வேறு ஜீன் கட்டமைப்பு* இருக்கின்றன!

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், *"உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",*
*என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".*

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும்
*"Master check-up"*
என்பது இந்த நூற்றாண்டின்
*"மாபெரும் ஆங்கில மருத்துவத்தின் வணிக மோசடி".*

அப்படியானால்,
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா?
என உறுதி செய்துகொள்ளுங்கள்.

*1. தரமான பசி.*
*2. தரமான தாகம்.*
*3. தரமான தூக்கம்.*

*"தரம்"* என்ன என்ற பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன பசி, தாகம், தூக்கம் இவற்றில் திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.

*படித்தில் உணர்ந்தது*

*சிந்திப்பவர் மட்டுமே.....*

*அனைத்து (நோய்) துன்பங்களில் இருந்தும்,* *அறியாமையில் இருந்தும்,*
*விடுதலை பெறுவர் ... !!!*