Saturday, 9 December 2017

God sivan: முக்தி தலங்கள்

முக்தி தலங்கள்
1. பிறந்தால் முக்தியளிக்கும் திருத்தலம்..
திருவாரூர்..
2.இறந்தால் முக்தியளிக்கும் திருத்தலம்..
வாரணாசி...(காசி).
3.நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலம்.. திருவண்ணாமலை.
4. தரிசிக்க முக்தியளிக்கும் திருத்தலம்..
தில்லை (சிதம்பரம்)
5. திருவிளையாடல்கள் சொல்ல முக்தியளிக்கும் திருத்தலம்..
திருஆலவாய் (மதுரை)
6. கேட்க முக்தியளிக்கும் திருத்தலம்..
அவிநாசி
7. தங்கினால் முக்தியளிக்கும் திருத்தலம்.. காஞ்சிபுரம்..
8. குளித்தால் முக்தியளிக்கும் திருத்தலம்.. வேதாரண்யம்..(திருமறைக்காடு)
மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள்.
இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன.
இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
என்ற முழக்கம் உருவாயிற்று போலும்.
இறைவன் நடராஜபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.
அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு.
ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் அல்லது தில்லையில் தரிசனம் செய்வது மிக்க நன்று.
இது எல்லோராலும் இயலாது. சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது.
மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும்.
ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம்.
அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.
மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.
அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் ஆராதனைகள் பார்த்து மகிழ்ந்து  வரலாம்.
அர்ச்சனை செய்யலாம்.
அன்னதானம் செய்யலாம்.
திருக்கோவில்களில் நமசிவாய... சிவாயநம.. என்று மனதில் தியானித்திருப்போம்...

சிவசிவ......நமசிவாய

No comments:

Post a Comment